MARC காட்சி

Back
நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில்
245 : _ _ |a நிலாத்திங்கள் துண்டத்தான் கோவில் -
246 : _ _ |a திருநிலாத் திங்கள் துண்டம்
520 : _ _ |a திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது. நிலா வென்றாலும், திங்கள் என்றாலும் ஒன்றுதான். அவ்வாறிருந்தும் நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் எவ்வாருண்டாயிற்று என்று தெரியவில்லை. திருமங்கையாழ்வார் சொற்றொடர் மங்களாசாசனமே வழங்கியுள்ளார். பெரிய மதிலாகச்சுற்றி வளைத்து இரண்டு சன்னதிகளையும் ஒரு பெரும் கோட்டைக்குள் வைத்தது மாதிரி அமைத்துவிட்டனர். இந்த மதிலும் திருமங்கையாழ்வாரின் காலத்திற்குப் பின்னால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் தில்லை கோவிந்தராஜன் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குள் உள்ளான் என்று திருமங்கையாழ்வார் ஓரிடத்திலும் சொல்லவில்லை. இப்பெருமாள் பார்ப்பதற்கு பேரழகு பொருந்தியவர். குளிர்ந்த கிரணங்களை வீசிக்கொண்டே இருக்கிறார் என்பதை இவர் முன்நின்ற சிறிது நேரத்திலேயே உணரமுடிகிறது. அவ்வளவு ரம்யமான தேஜஸ் பொருந்திய தண் என்ற நிலவுமுகன். பெயருக்கேற்ற பொருத்தத்துடன் பேரழகு பொலிய நிற்கிறார். மாமரத்தை தழைக்கச் செய்த பிறகு பார்வதி மீண்டும் யாகத்தை துவக்க இதனால் மேலும் சினந்த சிவன் தனது தலையில் உள்ளகங்கையை ஏவினார் தமக்கையாயிற்றே என்றெண்ணி தன்யாகத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டாமென்று வேகமாக வந்த கங்கையை வேண்டினாள். கங்கை அதைப்பொருட்படுத்தவில்லை. பார்வதி தனது பக்தி மேலீட்டால் மணலினால் லிங்கம் செய்து தவமிருந்தாள். கங்கையால் அந்த லிங்கத்தைக் கரைக்க முடியவில்லை. இதைக் கண்ட பார்வதி மிக்க சந்தோஷத்துடன் அந்த லிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டாள். இவ்விருவருக்கும் நிலாத்திங்கள் துண்டத்தான் அருள்பாலித்தார். இவ்விதம் சிவனுக்கும் பார்வதிக்கும் ஒருசேர அருளிய ஸ்தலம் உண்டென்றால் அது இது ஒன்றுதான். புராணங்களில் நேர் ஒருவரில்லா வல்லி என்று குறிக்கப்பட்ட இந்தப் பிராட்டிக்கு நிலாத்திங்கள் துண்டத்தானின் திவ்ய தேசத்தில் தனிச் சன்னதி உள்ளதாக அறிய முடிகிறது. இங்கு தற்போது நாச்சியாரில்லை. புராணங்கூறும் புஷ்கரணியில்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் தலைப்பிலிட்ட பாடலால் மங்களாசாசனம். நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், நிலாத்திங்கள் துண்டத்தானாக எழுந்தருளியுள்ள எம்பெருமானே, அர்ஜு னன் நின்னை பூசித்து நின் திருவடிகளில் சமர்ப்பித்த மலர்களை திருவடி பாக்கியத்தின் மேன்மை கருதி. பதினொன்று கூத்துக்களில் ஒன்றான பாண்டரங்கம் என்னும் கூத்தாடும் சிவன் தன் தலையில் ஏற்றுக் கொண்டான். இதை ஆழ்வார்கள் பலரும் அருளியுள்ளனர். இவ்விதம் கலாத்திங்கள் (கலை-நிலவு) கலாத்திங்கள் - வளரும் திங்கள் (கலை என்றாலே வளர்தல் என்ற ஒரு பொருளும் உண்டு) சூடிய இவனது தலைமேல் தனது பாத பூஜைப் புஷ்பங்கள் இருந்தும் இந்த மேதினயோர் நீயே பரம்பொருள்என்று நின் திருவடிப் பெருமையை தெளியாமல் உள்ளார்களே என்று பாடி இருப்பது இத்தல வரலாற்றோடு மிகவும் சிந்தித்துப் பார்க்கத் தக்கதாகும்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், மங்களாசாசனம், திவ்யதேசம், திருமங்கையாழ்வார், நிலாத்திங்கள் துண்டத்தான், திருநிலாத்துண்டம், ஏகாம்பரேசுவரர் கோயில், காஞ்சிபுரம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
914 : _ _ |a 12.8455407
915 : _ _ |a 79.700253
916 : _ _ |a நிலாத்திங்கள் துண்டத்தான், சந்திரசூடப் பெருமாள்
917 : _ _ |a நிலாத்திங்கள் துண்டத்தான், சந்திரசூடப் பெருமாள்
918 : _ _ |a நேரொருவர் இல்லா வல்லி, நிலாத்திங்கள் துண்டத்தாயார்
923 : _ _ |a சந்திர புஷ்கரணி
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
928 : _ _ |a இல்லை
930 : _ _ |a ஒரு சமயம் பார்வதிக்கும், பரமசிவனுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டு பார்வதி இவ்விடத்தில் ஒரு மாமரத்தின் கீழ் தவம் செய்ய அத்தவத்தை சோதிக்க எண்ணி சிவன் மாமரத்தை நெற்றிக் கண்ணால் தீஜ்வாலைகளால் எரிக்க பார்வதி திருமாலைப் பிரார்த்தித்தாள். சங்கு சக்ரதாரியாகத் தோன்றிய திருமால் அம்ருத கிரணங்களால் மாமரத்தை தழைப்பிக்கச் செய்ய பார்வதியின் தாபம் தீர்ந்து தவத்தைத் தொடர்ந்தாள். பார்வதியின்  தாபம் தீர்க்கப்பட்டதால் (துண்டிக்கப்பட்டதால்) இப்பெருமானுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயருண்டாயிற்று. நிலவின் குளிர்ந்த கிரணங்களால்பார்வதியின் யாகத்திற்குண்டான தடை துண்டிக்கப்பட்டதால் இப்பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டத்தான் என்ற பெயர் ஏற்பட்டதென்பர். பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
935 : _ _ |a இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் உள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம்
938 : _ _ |a காஞ்சிபுரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000193
barcode : TVA_TEM_000193
book category : வைணவம்
cover images TVA_TEM_000193/TVA_TEM_000193_காஞ்சிபுரம்_நிலாத்திங்கள்-துண்டத்தான்-கோயில்-0004.jpg :
Primary File :

cg103v068.mp4

TVA_TEM_000193/TVA_TEM_000193_காஞ்சிபுரம்_நிலாத்திங்கள்-துண்டத்தான்-கோயில்-0001.jpg

TVA_TEM_000193/TVA_TEM_000193_காஞ்சிபுரம்_நிலாத்திங்கள்-துண்டத்தான்-கோயில்-0002.jpg

TVA_TEM_000193/TVA_TEM_000193_காஞ்சிபுரம்_நிலாத்திங்கள்-துண்டத்தான்-கோயில்-0003.jpg

TVA_TEM_000193/TVA_TEM_000193_காஞ்சிபுரம்_நிலாத்திங்கள்-துண்டத்தான்-கோயில்-0004.jpg